பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த பானிபூரி விற்பனையாளர் உள்பட 3 பேர் கைது.!

0 2083

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

சிதம்பரத்தில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு வந்த தகவலின் அடிப்படையில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது கடைத்தெருவில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி அருகே பானிபூரி விற்பனை செய்பவர் உள்ளிட்ட 3 பேர் பள்ளி மாணவர்களிடம் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து அவர்களை கைது செய்த போலீசார் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments