70 வயது மூதாட்டியை கத்தியால் தாக்கி கட்டி போட்டு 20 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளை

0 2322

சென்னை அரும்பாக்கத்தில் 70 -வது வயது மூதாட்டியை கத்தியால் தாக்கி கட்டி போட்டு, 20 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

அரும்பாக்கம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் கங்கா. வீட்டில் தனியாக இருந்த போது 4 மர்ம நபர்கள் கை கால்களை கட்டி,வாயில் துணியை வைத்து மிரட்டி, அவர் அணிந்திருந்த நகை மற்றும் பீரோவில் இருந்த நகை, 60 ஆயிரம் ரொக்கத்தை திருடி சென்றுள்ளனர்.

கொள்ளையடித்து மர்மநபர்கள் மூதாட்டியின் கைவிரல்களை வெட்டியதுடன், கொள்ளை குறித்து யாரிடமும் தெரிவிக்க கூடாது என மிரட்டி சென்றுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments