மாணவர்கள் தேர்வு எழுதாதது குறித்து ஆய்வு செய்து அரசு விளக்கமளிக்க வேண்டும் - கே.ஏ.செங்கோட்டையன்

0 1300

12ஆம் வகுப்பு தமிழ் பாடத்தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்காதது குறித்து ஆய்வு செய்து, சட்டமன்றத்தில் அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தியுள்ளார்.

கோபிச்செட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாரியூர், வெள்ளாளபாளையம் மற்றும் நஞ்சகவுண்டம்பாளைம் பகுதியில், சுமார் 71 லட்சம் மதிப்பீட்டில், கழிவு நீர் கால்வாய், தார் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை துவங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த கே.ஏ.செங்கோட்டையன் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் வெள்ளாளப்பாளைம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக, சுமார் 50 ஆயிரம் மதிப்பிலான இருக்கைகளை வழங்கியதுடன், அந்த பள்ளியில் பொது தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு எழுதுகோல்களை வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments