கன்னியாகுமரி பாதிரியார் மீது கல்லூரி மாணவி பாலியல் புகார்..!

0 3474

கன்னியாகுமரியைச் சேர்ந்த பாதிரியார் மீது கல்லூரி மாணவி அளித்த பாலியல் புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

கொல்லங்கோடு அருகே பாத்திமா நகரைச் சேர்ந்த பெனடிக்ட் ஆன்றோ என்பவர் குழித்துறையை தலைமையிடமாகக் கொண்ட சீரோ மலங்கரை கத்தோலிக்க சபையில் பாதிரியாராக உள்ளார்.

இந்த நிலையில் அவர் மீது பேச்சிப்பாறையைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் ஒருவர் அளித்த புகார் மனுவில், பெனடிக்ட் ஆன்றோ பேச்சிப்பாறை சர்ச்சில் பாதிரியாராக இருந்த சமயத்தில் பிரார்த்தனைக்காக சென்ற போது தம்மை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்ததாகவும் உடலில் மோசமாக தொட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments