தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் - மத்திய அமைச்சர் தகவல்

0 1013

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் விரைவில் அருங்காட்சியம் அமைப்படும் என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உறுதியளித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பியிருந்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு ஐந்தரை ஏக்கர் நிலத்தை இந்திய தொல்லியல் துறைக்கு வழங்கியுள்ளதாகவும், அருங்காட்சியகம் மிக குறுகிய காலத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், டிஜிட்டல் கல்வெட்டு அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாகவும் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments