இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 16 தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

0 1055

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 16 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்த கடிதத்தில், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 16 மீனவர்கள் விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படை யினரால் 12ந் தேதியன்று சிறைபிடிக்கப்பட்டதாகவும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினர் தாக்குதல் கடந்த ஒரே மாதத்தில் நடந்த மூன்றாவது சம்பவம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக் காவலில் உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களின் மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவித்திட தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments