சிக்கிம் மாநிலத்தில் கடும் பனியில் சிக்கிய 900 சுற்றுலா பயணிகள்

0 1395

சிக்கிம் மாநிலத்தில் பெய்து வரும் கடும் பனிப் பொழிவால் அங்கு சுற்றுலா சென்ற 900 பேர் சிக்கிக் கொண்டனர்.

நாதுலா மற்றும் சோம்கோ ஏரிக்கு 89 வாகனங்களில் 900 பேர் சுற்றுலா சென்றனர். அங்கு பெய்த பனிப்பொழிவில் சுற்றுலா பயணிகள் சென்ற வாகனங்கள் சிக்கிக் கொண்டன.

இதையடுத்து ராணுவத்தினர் களமிறக்கப்பட்டு 15 வாகனங்களையும் அதில் இருந்தவர்களையும் பத்திரமாக மீட்டெடுத்தனர்.

அடர்ந்த பனி படிப்படியாக அகற்றப்பட்டு வருவதால் மீட்கப்பட்ட வாகனங்கள் மூலம் காங்டாக் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அனுப்பப்பட்டு வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments