மது போதையில் தாறுமாறாக ஓட்டிச் செல்லப்பட்ட கார்… 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

0 1648

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மது போதையில் தாறுமாறாக ஓட்டிச் செல்லப்பட்ட கார், சாலையோர நடைமேடையில் உறங்கிக்கொண்டிருந்த யாசகர்கள் மீது ஏறி, இறங்கியதில் 3 பேர் உயிரிழந்தனர்.

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலை ஓரம் உள்ள நடைமேடையில் நேற்றிரவு யாசகர்கள் சிலர் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வேகமாகவும் தாறுமாறாகவும் வந்த மாருதி எர்டிகா கார் ஒன்று, நடைமேடையில் உறங்கியவர்கள் மீது ஏறி,இறங்கியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஒருவர் படுகாயமடைந்தார். விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரை விரட்டிச் சென்று மடக்கிய பொதுமக்கள், காரை அடித்து நொறுக்கியதுடன், காருக்குள் போதையில் இருந்த லட்சுமி நாராயணன், அஸ்வந்த் ஆகிய இருவரையும் பிடித்து அடித்து, உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments