நடிகர் ராதாரவி தலைமையில் செயல்பட்டு வரும் டப்பிங் யூனியன் அலுவலகத்திற்கு சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள்.!

0 2716

சென்னை சாலிகிராமத்தில் நடிகர் ராதாரவி தலைமையில் செயல்பட்டு வரும் டப்பிங் யூனியன் அலுவலகம் அரசு விதிகளை மீறி கட்டப்பட்டதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

டப்பிங் யூனியன் பணத்தில் அலுவலகத்தில் இரு தளங்களை சீரமைப்பு செய்த நடிகர் ராதா ரவி உறுப்பினர்களுக்கு முறையாக கணக்கு காட்டவில்லை என்றும் அரசின் வீதிகளை மீறி கட்டியதாகவும் உறுப்பினர்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

இது தொடர்பாக 3 மாதத்திற்குள் விளக்கமளிக்க ராதாரவிக்கு வீட்டு வசதி வாரியம் அவகாசம் வழங்கிய நிலையில், அவர் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காததால் இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள், அலுவலகத்தில் இருந்த ஊழியர்களை வெளியேற்றிவிட்டு, போலீஸ் பாதுகாப்புடன் இரு தளங்களுக்கும் சீல் வைத்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments