அக்னி குண்டத்தில் தவறி விழுந்த பெண் பக்தை.. துரிதமாக செயல்பட்ட சக பக்தரால் மீட்பு!

0 1527

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பெத்தனாச்சியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவின் போது அக்னி குண்டத்தில் தவறி விழுந்த பெண் பக்தை ஒருவரை துரிதமாக செயல்பட்டு சக பக்தர் காப்பாற்றி உள்ளார்.

மேல்மாந்தை கிராமத்தில் பெத்தனாச்சியம்மன் கோவிலில் நடந்த இந்த தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். தீயணைப்பு வீரர்கள் பக்தர்களை ஒவ்வொருவராக அக்னி குண்டத்தில் இறங்க அனுமதித்தனர்.

அப்போது பெண் பக்தை ஒருவர் எதிர்பாராத விதமாக அக்னி குண்டத்தில் தவறி விழுந்த நிலையில் உடனடியாக சக பக்தர் அவரை வெளியே இழுத்து காப்பாற்றினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments