உக்ரைனின் பல்வேறு பகுதிகளில், 6 ஹைப்பர்சோனிக் கின்சல் உள்பட 81 ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதல்..!

0 1289

ரஷ்யா நடத்திய தொடர் ஏவுகணை தாக்குதல்களால் மேற்கு உக்ரைனில் லிவிவ் பகுதியில் 5 பேரும், கெர்சோனில் 3 பேரும் உயிரிழந்தனர்.

தலைநகர் கீவ், ஒடேசா, கார்கிவ், கெர்சோன் உட்பட பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டுவரும் தாக்குதல்களில் கட்டடங்கள், மின் நிலையங்கள் சேதமடைந்துள்ளன.

6 ஹைப்பர்சோனிக் கின்சல் ஏவுகணைகள் உள்பட 81 ஏவுகணைகள் மற்றும் 8 ட்ரோன்கள் மூலம் எரிசக்தி நிலையம் மற்றும் உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

10 பிராந்தியங்களில் முக்கிய உள்கட்டமைப்புகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

தாக்குதலால் சில பகுதிகள் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. கீவில் ஏராளமான கார்கள் எரிந்துள்ள நிலையில், 7 மணி நேரம் வான்வழித் தாக்குதல் நடைபெற்றதாகவும், 40 சதவீதம் பேர் மின்சாரம் இல்லாமல் இருப்பதாகவும் நகர மேயர் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments