வங்காளதேசத்தில் திடீரென வெடித்துச் சிதறிய 7 மாடிக் கட்டடம்... இடிபாடுகளில் சிக்கிய 17 பேர் உயிரிழப்பு!

0 1650

வங்காளதேச தலைநகரான டாக்காவில் ஏழு மாடிக் கட்டடம் வெடித்து சிதறியதில் 2 பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.

நூற்றுக்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இடிபாடுகளிடையே ஏராளமானோர் சிக்கியுள்ள நிலையில் உயிர்ச்சேதம் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

200க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது போல திடீரென கட்டடம் சரிந்ததாக உள்ளூர்மக்கள் கூறுகின்றனர்.

இது ஏதும் சதிவேலையா என்று உறுதி செய்ய முடியவில்லை என்று கூறிய காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments