பாகிஸ்தானில் ஹோலி கொண்டாடிய சிந்தி மாணவிகள் மீது தாக்குதல்.. மதவாத அமைப்பினர் அடித்து உதைத்ததாக மாணவர்கள் புகார்!

0 1880

பாகிஸ்தான் கராச்சியில் ஹோலிப் பண்டிகைக் கொண்டாடிய இளம்பெண் உள்பட 15 மாணவர்கள் மத அடிப்படைவாத மாணவர் அமைப்பினரால் தாக்கப்பட்டனர்.

இதில் சிலர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கராச்சி பல்கலைக்கழகத்தின் சிந்தி பிரிவில் உள்ள மாணவர்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணம் இறைத்து ஹோலி கொண்டாடிய போது மதவாத அமைப்பினர் சிலர் அவர்களைத் தாக்கினர்.

சில மாணவிகள் மானபங்கப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments