விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்த 2 பேர் பலி..! உரிமையாளர் உள்ளிட்ட 2 பேர் மீது வழக்கு

0 1563

விருதுநகர் அருகே நடந்த பட்டாசு ஆலை விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் ஆலை உரிமையாளர் மற்றும் போர்மேன் ஆகிய இருவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் கோட்டநத்தம் கிராமத்தில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை நாக்பூர் லைசன்ஸ் உடன் செயல்பட்டு வருகிறது.

இந்த பட்டாசு ஆலையில் கருந்திரி தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட போது ஏற்பட்ட வெடிவிபத்தில் சேடப்பட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி கருப்பையா ஆகிய இருவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலையில் உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து பட்டா சாலையின் உரிமையாளர் ரமேஷ் மற்றும் ஆலையின் போர் மேன் சுப்புராஜ் ஆகிய இருவர் மீதும் வச்சகாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments