திரிபுரா முதலமைச்சராக 2வது முறையாக பதவியேற்கிறார் மாணிக் சாஹா

0 1407

திரிபுரா முதலமைச்சர் பதவிக்கு மாணிக் சாஹாவை பாஜக எம்எல்ஏக்கள் ஒருமனதாக தேர்வு செய்துள்ளனர். முதலமைச்சராக இருந்த விப்லப் குமார் கடந்தாண்டு ராஜினாமா செய்ததையடுத்து, மாணிக் சாஹா அப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட பாஜக 32 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான IPFT கட்சி ஓரிடத்திலும் வெற்றி பெற்றன.

இந்நிலையில், அகர்தலாவில் நேற்று நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மாணிக் சாஹா முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திரிபுரா முதலமைச்சராக 2வது முறையாக நாளை மாணிக் சாஹா பதவியேற்கவுள்ளார். இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments