"சென்னையில் இருந்து பினாங்கிற்கு விமான சேவை".. முதலமைச்சருக்கு, மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் கடிதம்..!

0 1720

சென்னையில் இருந்து மலேசியாவின் பினாங்கிற்கு நேரடி விமானப்போக்குவரத்தை தொடங்க சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிடப்பட்ட அறிக்கையில், பினாங்கில் வாழும் தமிழர்கள், மலேசியாவின் வளர்ச்சிக்கு ஆற்றும் பங்களிப்பை குறிப்பிட்டு கடந்த மாதம் பிரதமருக்கும், மத்திய அமைச்சருக்கும் முதலமைச்சர் கடிதம் எழுதியிருந்ததால், அதனை பரிசீலித்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, விமான சேவை தொடர்பாக தெரிவித்ததாகஅறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments