ராஜபாளையம் அருகே இருபிரிவு மக்களிடையே மோதல்.. பதற்றம் ஏற்பட்டுள்ளதால் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு..!

0 4579
ராஜபாளையம் அருகே இருபிரிவு மக்களிடையே மோதல்.. பதற்றம் ஏற்பட்டுள்ளதால் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு..!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஒரு பிரிவினர் வசிக்கும் பகுதிக்குள் ஆயுதங்களுடன் புகுந்து மற்றொரு பிரிவினர் நடத்திய தாக்குதலில் 2 பேர் காயமடைந்ததால் ஏற்பட்டுள்ள பதற்றத்தையடுத்து அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

 ஆசிலாபுரத்தைச் சேர்ந்த ஒரு பிரிவு இளைஞர்களும், செந்தட்டியாபுரத்தை சேர்ந்த இன்னொரு பிரிவு இளைஞர்களும் இருசக்கர வாகனங்களில் சென்றபோது, 2 பேரின் வாகனங்களும் இடித்ததாக சொல்லப்படுகிறது.

இதில் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், செந்தட்டியாபுரத்தை சேர்ந்த இளைஞர்கள், ஆசிலாபுரத்துக்குள்  கத்தி, உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டதில் 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட தரப்பு மக்கள், சங்கரன் கோயில் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை  காவல் துறையினர் தடுத்து நிறுத்தி சமரசம் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments