வடமாநில தொழிலாளர்களிடம் இந்தியில் பேசி நம்பிக்கையளித்த போலீசார்..

0 1766

மிழகத்தில் உங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்களிடம் சென்னை போக்குவரத்து துணை ஆணையர் ஹர்ஷ் சிங் இந்தியில் பேசி நம்பிக்கை அளித்துள்ளார்.

வடமாநிலத் தொழிலாளர்கள் மீதான போலி தாக்குதல் வீடியோ பரவல் மற்றும் ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி சந்தையில் வேலைப்பார்த்து வரும் சுமார் 4 ஆயிரம் வடமாநில தொழிலாளர்களில் ஆயிரத்து 500 பேர் கடந்த 3 நாட்களில் சொந்த ஊருக்கு சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில், மீதமுள்ள தொழிலாளர்களை காவல்துறையினர் சந்தித்தனர். அப்போது, நாம் அனைவரும் இந்தியரே என்பதை குறிக்கும் வகையில் அனைவரும் இணைந்து தேசிய கீதம் பாடினார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments