கோயில் திருவிழாவிற்காக அமைக்கப்பட்ட கடையில் மாமூல் வசூலிப்பு: திமுக - அதிமுகவினரிடையே தகராறு!

0 1566

சேலம் மாவட்டம் பள்ளப்பட்டியில் கோயில் திருவிழாவிற்காக அமைக்கப்பட்ட கடையில் மாமூல் வசூலித்தது தொடர்பாக திமுக அதிமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது.

மாரியம்மன் கோயிலில் மாசி மாத திருவிழா நடைபெற்று வரும் நிலையில், கோயில் அருகே தற்காலிக கடை நடத்துபவர்களிடம் ஒருதரப்பினர் மாமூல் வசூலித்ததாகவும், அதனை மற்றொரு தரப்பினர் தட்டிக்கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் மாரியப்பன் தரப்பினருக்கும், திமுக பிரமுகர் காமராஜ் தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றி ஏற்பட்ட மோதலில் 6 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

பள்ளப்பட்டி போலீசார் இருதரப்பினரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போது, இருதரப்பினரின் ஆதரவாளர்களும் காவல் நிலையம் முன்பு குவிந்ததால் அவர்களை போலீசார் கலைந்து போகச் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments