''நிதி மோசடிகளில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு தப்பியவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்..'' - டிஜிபி சைலேந்திரபாபு..!

0 2362

நிதி நிறுவனங்கள் மூலம் பண மோசடிகளில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு தப்பியவர்களை கைது செய்ய இண்டர்போல் உதவியை நாடியிருப்பதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில்,  62-வது தமிழ்நாடு மாநில காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான தடகளம், சைக்கிலிங் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், காவலர்களுக்கு 7 நாள் வேலை என்பதை தற்போது சட்ட திருத்தம் செய்து வாரத்தில் 5 நாட்கள் வேலை என்று மாற்றப்பட்டுள்ளதுடன்,  6-வது நாள் வேலை செய்தால் அதற்கு ஈசிஆர் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். 

திருவண்ணாமலை தீபம் உள்ளிட்ட முக்கிய நட்களில் மட்டுமே விடுமுறை வழங்க முடியாத நிலை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments