திருப்பதியில் தங்கும் அறைகளை பதிவு செய்வதில் புதிய நடைமுறை..!

0 7145

திருப்பதி மலையில் தங்கும் அறைகள் ஒதுக்கீடு செய்வதில் இடைத்தரகர்கள் தலையீட்டைத் தடுக்க இன்று முதல் புதிய நடைமுறையை தேவஸ்தான நிர்வாகம் நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கொண்டு வந்துள்ளது.

அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு உரிய ரசீதுகளை பக்தர்கள் வாங்கும்போது பேஸ் ஐடென்டிஃபிகேஷன் டெக்னாலஜி மூலம் பக்தர்களின் முகம் அங்குள்ள வெப்கேம் மூலம் படம் பிடிக்கப்பட்டு தேவஸ்தான சர்வரில் சேமித்து வைக்கப்படும்.

அறைகளை காலி செய்யும் போதும் அதே பக்தர் கவுண்டருக்கு நேரடியாக சென்று அறைகளை காலி செய்ய வேண்டும்.

மாறாக அறைகளை பெற்றவர் ஒருவராகவும் காலி செய்தவர் மற்றொருவாராகவும் இருந்தால் டெபாசிட் பணம் திரும்ப கிடைக்காது. 

முன்கூட்டியே அறைகளை வாங்கி வைக்கும் இடைத்தரகர்கள்  தலையீட்டைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments