ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உடன் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் சந்திப்பு..!

0 1421

மும்பையில் ரிசர்வ் வங்கியின் பிராந்திய அலுவலகத்திற்கு சென்ற மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாசுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இது குறித்து தெரிவித்த சக்தி காந்த தாஸ், அனைவரையும் உள்ளடக்கிய நிதி மேலாண்மை, பணம் செலுத்துதல், டிஜிட்டல் வழி கடன் வழங்கும் முறை உள்ளிட்டவை தொடர்பாக பில்கேட்சுடன் ஆலோசனை மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

போலியோ ஒழிப்பு, எச்.ஐ.வி. பரவலைக் கட்டுப்படுத்துதல், வறுமை ஒழிப்பு போன்றவற்றில் இந்தியாவின் சாதனைகளை எடுத்துரைத்து, பில்கேட்ஸ் அண்மையில் புகழாரம் தெரிவித்திருந்த நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments