கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து..! 5 பெண்கள் உடல்நசுங்கி பலியான பரிதாபம்

0 2669

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து ஓடி சாலையோரம் நின்றிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில், 5 பெண்கள் உடல்நசுங்கி உயிரிழந்தனர்.

30க்கும் மேற்பட்டோர் வீரப்பூர் வேடபுரி திருவிழாவில் பங்கேற்றுவிட்டு, தங்கள் சொந்த ஊருக்கு கார் மற்றும் டெம்போ வேனில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

கரூர் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்தபோது அதை ஓட்டி வந்த சென்னை தாம்பரத்தை சேர்ந்த ரவியின் கட்டுப்பாட்டை இழந்து ஓடி, சாலையோரமாக நின்றிருந்த லாரி மீது மோதியது.

இதில், ரவியின் மனைவி கவிதா, உறவினர்களான சுதா, கந்தாயி உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ரவி கண்ணயர்ந்த நேரத்தில் கார் விபத்தில் சிக்கியது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments