ஆந்திராவில் மின்னணு உபகரணங்கள் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து.. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய பொருட்கள் நாசம்

0 1621

ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா விமான நிலையம் அருகே இயங்கி வரும் மின்னணு உபகரண தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய பொருட்கள் எரிந்து நாசமடைந்தன.

பாக்ஸ்லிங்க் என்னும் மின்னணு உபகரணங்கள் தயாரிக்கும் ஆலையில் நேற்று வழக்கம்போல தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

இதையடுத்து ஆலையில் இருந்து தொழிலாளர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டு, நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு, தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

தீ விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படாத நிலையில், விபத்துக்கு மின்கசிவே காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments