2 நாள் பயணமாக இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி இந்தியா வருகை..!

0 1975

2 நாள் அரசு முறைப்பயணமாக இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி நாளை மறுநாள் (மார்ச் 2) இந்தியா வரவுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு இத்தாலி பிரதமர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும். இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மார்ச் 2ம் தேதி இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலேனியுடன், அந்நாட்டு துணை பிரதமர் மற்றும் உயர்மட்ட குழுவினரும் இந்தியா வர உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த பயணத்தின்போது பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஆகியோரை மெலோனி சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments