தண்ணீர் எடுக்கச் சென்று உறைகிணற்றில் விழுந்த மூதாட்டி.. பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்..!

0 1445

தூத்துக்குடியில் வீட்டுத் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணற்றில் தண்ணீர் எடுக்க முயன்ற 70 வயது மூதாட்டி ஒருவர், தவறி கிணற்றுக்குள் விழுந்த நிலையில், தீயணைப்புத்துறையினர் அவரை மீட்டனர்.

மேல அலங்கார தட்டு பகுதியை சேர்ந்த பார்வதி என்ற அந்த மூதாட்டி, மகளுடன் வசித்து வருகிறார்.

காலை மகள் வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், வீட்டின் பின்பக்கம் உள்ள உறைகிணற்றில் தண்ணீர் எடுக்க முயன்றபோது நிலை தடுமாறி உள்ளே விழுந்திருக்கிறார்.

கிணற்றில் இருந்த குழாயை பிடித்துக் கொண்டு மூதாட்டி அலறிய சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்க முயன்றுள்ளனர். அந்த முயற்சி தோல்வி அடைந்த நிலையில், தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், பார்வதியை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments