நண்பன் வீட்டில் படிக்க சென்றபோது நகைகளை திருடியதாக கல்லூரி மாணவர் கைது!

0 2016

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நண்பன் வீட்டில் படிக்க சென்றபோது நகைகளை திருடியதாக கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

சாரம் பகுதியைச் சேர்ந்த ஐயனாரப்பன் என்பவர் தனது வீட்டில்  நகைகள் திருடுபோனதாக ஒலக்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேலும் தனது மகன் ஐயப்பனுடன் படிக்கும் கவுதம் என்பவர் தங்கள் வீட்டிற்கு வந்து சென்ற பின்தான் நகைகள் காணாமல் போனதாகவும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, திண்டிவனம் அரசு கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவர்  கவுதமிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், திருடியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரைக் கைது செய்து, 26 கிராம் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments