ஓலா காரை முன்பதிவு செய்து கஞ்சா கடத்தியதாக 2 பேர் கைது.. 18 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்!

0 1368

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஓலா காரை முன்பதிவு செய்து கஞ்சா கடத்தியதாக திருச்சி இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பூங்குணம் பகுதியில்  வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியாக வந்த காரை  தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் சென்னையிலிருந்து கும்பகோணத்திற்கு சுமார் 18 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கடத்தி செல்ல முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை பறிமுதல் செய்த போலீசார், காரிலிருந்த 3 பேரை பிடித்து விசாரித்ததில், 2 பேர் திருச்சி இலங்கைத் தமிழர் முகாமை சேர்ந்த மாதவன், நதிஷ் என்பதும், இன்னொருவர் கார் டிரைவர் அண்ணாதுரை என்பதும், ஓலா காரை முன்பதிவு செய்து, சென்னையிலிருந்து கஞ்சாவை கடத்தி வந்து,   திருச்சி, கும்பகோணம் பகுதியில் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், டிரைவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments