30 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்பு

0 1718

மத்திய பிரதேசத்தில், 30 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுமி நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டார்.

சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள லால்குவான் பாலி கிராமத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த நான்சி என்ற சிறுமி அங்கிருந்த திறந்தவெளி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், ஆழ்துளைக் கிணற்றின் பக்கவாட்டில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி, குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பெரும் போராட்டத்திற்கு பத்திரமாக மீட்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments