பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 8 கோடி விவசாயிகளுக்கு 13வது தவணை உதவித்தொகை இன்று விடுவிக்கிறார் பிரதமர் மோடி

0 1646

நாடு முழுவதும் 8 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் 13வது தவணை உதவித் தொகையை நேரடியாகச் செலுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மற்றும் பெலகாவி மாவட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று பயணம் செல்கிறார். சிவமொக்காவில் 450 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன விமான நிலையத்தை திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து, கர்நாடகாவில் புதிய ரயில்வே பாதை திட்டங்கள் உள்ளிட்ட மேலும் 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். அதில், 44 ஸ்மாட் சிட்டி திட்டங்கள், கிராமப் புற திட்டங்கள் என பல புதிய திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments