திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் உயிரிழப்பு

0 2605

தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில், உறவினர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருந்த 19 வயது இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து இறந்த காணொளி வெளியாகி உள்ளது.

நிர்மல் மாவட்டம் பார்டி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த முத்யம் என்ற இளைஞர் பங்கேற்று உற்சாகமாக நடனமாடி கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

இதையடுத்து முத்யத்தின் உறவினர்கள் அவரை பைன்சா பகுதி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments