ஸ்கூட்டர் மீது மோதிய டிப்பர் லாரி.. அதில் பயணித்த தாத்தாவும் 6 வயது பேரனும் பரிதாப பலி..!

0 2779

உத்தரபிரதேசத்தில் தாத்தாவும் பேரனும் பயணித்த ஸ்கூட்டர் மீது மோதிய டிப்பர் லாரி, சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஸ்கூட்டரை இழுத்துச் சென்றது.

மஹோபா பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் உதித் நாராயண் சன்சோரியா என்பவர், தனது 6 வயது பேரன் சாத்விக்குடன் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அதிவேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று ஸ்கூட்டரின் பின்பக்கம் மோதியதில் உதித் சம்பவ இடத்திலேயே தூக்கிவீசப்பட்டு உயிரிழந்தார்.

ஸ்கூட்டர் மீது மோதிய லாரியை ஓட்டுநர் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஓட்டிச் சென்ற நிலையில், சிறுவன் சாத்விக் ஸ்கூட்டருடன் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தான்.

அவ்வழியாகச் சென்றவர்கள் லாரியை தடுத்து நிறுத்தி ஓட்டுநரை அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments