சென்னை மெட்ரோ ரயில் கட்டுமான பணியின்போது நேரிட்ட விபத்து: கிரேன் ஆபரேட்டருக்கு போலி அனுபவ சான்றிதழ்.. இரண்டு மேலாளர்கள் கைது!

0 9819

சென்னை ராமாபுரம் பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமான பணியில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக, கிரேன் ஆபரேட்டருக்கு போலி பணி அனுபவ சான்றிதழ் வழங்கிய எல் அண்ட் டி நிறுவன மேலாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு ராமாபுரம் பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில், தூண்களுக்காக கட்டப்பட்ட சுமார் 30 அடி உயரம் கொண்ட கம்பிக் கூண்டை கிரேன் கொண்டு தூக்கும்போது, எதிர்பாராதவிதமாக அது கீழே சரிந்தது.

அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து மற்றும் லாரி மீது விழுந்ததில் 3 பேர் படுகாயமடைந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments