சீனாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்த விபத்து: 47 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்.!

0 1156

சீனாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில், உள்ளே சிக்கியுள்ள 47 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

கடந்த 22ம் தேதி  மங்கோலியாவில் உள்ள சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென சரிந்து விழுந்த நிலையில், அங்கு மீண்டும் மண்சரிவு ஏற்பட்டதால் மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கனரக இயந்திரங்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் தொழிலாளர்களை மீட்கும் பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளன.

நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments