குளத்தில் இருந்து தூர்வாரப்படும் வண்டல் மண் விதிகளை மீறி விற்கப்படுவதாக குற்றச்சாட்டு..!

0 1445

கன்னியாகுமரி மாவட்டம் கோதநல்லூர் குளத்தில் இருந்து தூர்வாரப்படும் வண்டல் மண் விதிகளை மீறி விற்கப்படுவதாக புகாரளிக்கப்பட்ட நிலையில், அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

குளங்களில் இருந்து எடுக்கப்படும் வண்டல் மண் மற்றும் மணலை அவற்றின் அருகிலேயே சேமித்து வைக்க வேண்டும் என்ற விதியை மீறி, கோதநல்லூர் பேரூராட்சி குளத்திலிருந்து தூர்வாரும் வண்டல் மண்ணை லாரிகளில் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர் என வீடியோ ஆதாரத்துடன் பொதுமக்கள் சார் ஆட்சியரிடம் புகாரளித்தனர்.

அதன் பேரில் வட்டாட்சியர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments