ரெயில்வே கேட் பணி.. பாலியல் அரக்கனை துணிவோடு எதிர் கொண்டேன்..! பெண் ரெயில்வே ஊழியர் ஆதங்கம்

0 3829

தென்காசி அடுத்த பாவூர் சத்திரம் ரெயில்வே கேட்டில் பெண் ஊழியரிடம் அத்துமீறலில் ஈடுட்ட இளைஞர் கைது செய்யப்பட்ட நிலையில், தான் போராடி வென்றதாக ரெயில்வே பெண் ஊழியர் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம், பாவூர் சத்திரம் பிரதான ரயில்வே கேட் பகுதியில் 16ஆம் தேதி இரவுப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ரெயில்வே ஊழியர் ஒருவர், பாலியல் தொல்லை கொடுத்தவனிடம் இருந்து 15 நிமிடத்திற்கு மேலாக போராடி தப்பித்து வந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த ஆசாமி அனீஸை கைது செய்தனர்.

தன்னைத் தவிர வேறு யாரும் தனக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்பதை பெண்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று பாலியல் சீண்டலில் இருந்து போராடி வென்ற தென்காசி ரயில்வே ஊழியர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments