தரமற்ற தார்ச்சாலை அமைத்த புகாரில் பொறியாளர்கள் 5 பேர் பணியிட மாற்றம்..!

0 2632

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சாலைகள் தரமற்று அமைக்கப்பட்ட புகாரில் நான்கு இளநிலை பொறியாளர்கள் மற்றும் ஒரு உதவி பொறியாளரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

வேட்டைக்காரனிருப்பு ஊராட்சி சடையன்காடு பகுதியில் உள்ள வஉசி நகரில் 41 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கப்பி சாலை தார்சாலையாக மாற்றப்பட்ட பத்து நாட்களிலேயே சேதமடைந்தது.

இதுகுறித்து கிராம மக்கள் புகார் தெரிவித்த நிலையில், இதே போல் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் குற்றச்சாட்டுகள் எழுந்தததையடுத்து, மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments