துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்த கால்பந்து வீரரின் உடல் விமானம் மூலம் கானா கொண்டுவரப்பட்டது..!

0 1485

துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்த கானா நாட்டு கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சுவின் உடல் விமானம் மூலம் கானாவிற்கு கொண்டுவரப்பட்டது.

தேசிய கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டியில், துணை அதிபர் பவுமியா முன்னிலையில், ராணுவ மரியாதையுடன் அவரது உடல் விமானத்திலிருந்து இறக்கப்பட்டது.

நிலநடுக்கத்திற்கு சில மணி நேரம் முன்பு, துருக்கியிலிருந்து புறப்பட இருந்த அட்சு, தனது அணியின் வெற்றியை கொண்டாட அங்கேயே தங்கினார். ஹட்டாய் மாகாணத்தில், அவர் வசித்த அடுக்குமாடி குடியிருப்பின் இடிபாடுகளுக்கு இடையே அவரது உடல் மீட்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments