பீகாரில் செல்போனை விழுங்கிய சிறைக் கைதி.. அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதை அறிந்து விபரீத செயல்!

0 1204

பீகாரில் சிறை அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதை அறிந்து கைதி ஒருவர் செல்போனை விழுங்கிய நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோபால்கஞ்ச் மாவட்டத்திலுள்ள அந்த சிறையில் அடைக்கப்படிருந்த கைஷர் அலி என்ற கைதிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.

எக்ஸ்ரே செய்து பார்த்ததில் வயிற்றுக்குள் செல்போன் இருப்பது தெரியவந்தது. பாட்னா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் கைஷர் அலியின் வயிற்றிலிருந்து அறுவை சிகிச்சை மூலம் செல்போனை அகற்றும் முயற்சி நடைபெற்று வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments