பீகார் மாநிலம் பாட்னா அருகே இருதரப்பினர் இடையே மோதல்.. துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

0 1622

பீகார் மாநிலம் பாட்னா அருகே தனியார் நிலத்தில் கார் பார்க்கிங் தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.

வன்முறையில் மேலும் சிலர் காயம் அடைந்த நிலையில், வீடுகள் மற்றும் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.

தகவலின்பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் மீதும் கிராமத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பத்தால் அங்கு பதற்றம் நிலவுவதால், கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வன்முறையில் ஈடுபட்டதாக 7 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நிலவரம் தற்போது கட்டுக்குள் இருப்பதாக சம்பவ இடத்தை ஆய்வு செய்த காவல்துறை உயர்அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments