வீடியோ கேம் விளையாட்டால் ஏற்பட்ட பார்வை குறைபாடு.. விரக்தியில் இளைஞர் விபரீத முடிவு..!

0 1944

கோவை வெள்ளலூர் அருகே வீடியோ கேம் விளையாட்டால் பார்வை குறைபாடு ஏற்பட்ட மன உளைச்சலில், பட்டதாரி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

பி.எஸ்.சி பட்டதாரியான மதன்குமார், வேலை கிடைக்காமல் வீட்டிலேயே இருந்து வந்த நிலையில், அவர் அடிக்கடி ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட கேம் விளையாடி வந்துள்ளார்.

இதனால் கடந்த சில நாட்களாக அவர் பார்வை குறைபாடு மற்றும் கடுமையான தலைவலியால் அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த மதன் குமார், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments