போலீஸ் சீருடையுடன் மதுபானம் கடத்தியதாக, பெண் காவலர் உட்பட 6 பேரை கைது..!

0 2557

நாகப்பட்டினத்தில் போலீஸ் சீருடையுடன் மதுபானம் கடத்தியதாக, பெண் காவலர் உட்பட 6 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரியிலிருந்து மதுபானம் கடத்தி வரப்படுவதாக, தகவல் கிடைத்ததையடுத்து, நாகப்பட்டினம் நகர காவல்துறையினர் மேலவாஞ்சூர் சோதனைச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்தை ஏற்படுத்திய சொகுசுகாரை பின்தொடர்ந்துள்ளனர்.

அக்கரைப்பேட்டை கடற்கரை அருகே ஸ்தூபி பகுதியில் இருந்த இரண்டு பேரிடம், காரிலிருந்த பெண் காவலர் உள்ளிட்ட நான்கு பேர், மதுபான பாட்டில்களை கொடுத்தபோது, போலீசார் அவர்களை பிடித்தனர்.

விசாரணையில் திருவாரூர் கொரடாச்சேரி காவல் நிலைய காவலர் ரூபிணி, தனது கணவர் ஜெகதீஷ், மற்றும் கோபிநாத், ராஜசேகர், மகாலிங்கம், மகேஸ்வரி ஆகியோருடன் மதுக்கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments