பிபிசி அலுவலகங்களில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த சோதனை நிறைவு..!

0 1432

டெல்லி, மும்பை நகரங்களிலுள்ள பிபிசி அலுவலகங்களில் கடந்த 3 நாட்களாக நடைபெற்றுவந்த வருமான வரி சோதனை நேற்றிரவு நிறைவடைந்தது.

சோதனை முடிவடைந்ததை அடுத்து, டெல்லி அலுவலகத்தில் இருந்த பிபிசி ஊழியர்கள் 10 பேர் 3 நாட்களுக்குப்பிறகு வீடு திரும்பினர்.

சோதனையில் டிஜிட்டல் பதிவுகள் மற்றும் கோப்புகளை அதிகாரிகள் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. கணிணிகள் ஸ்கேன் செய்யப்பட்டதாகவும், சோதனை தொடர்பாக வருமான வரித்துறை இன்று அறிக்கை வெளியிடும் எனவும் கூறப்படுகிறது.

சோதனை நிறைவுற்றதாக தெரிவித்துள்ள பிபிசி, அதிகாரிகளுக்கு தொடர்ந்து ஒத்துழைப்போம் என்றும், செய்தி வழங்கும் பணி இயல்பு நிலைக்குத்திரும்பியிருப்பதாகவும் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments