க்யூஆர் கோடு இல்லாமல் பெட்ரோல் போட மறுத்த பங்க் ஊழியருக்கு வாளால் வெட்டு..!

0 1939

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் க்யூஆர் கோட் இல்லாமல் பெட்ரோல் போட மறுத்த  பங்க் ஊழியரை  வாளால் வெட்டிவிட்டு 2 பேர் தப்பிச் செல்லும் காட்சிகள், சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக முன்பதிவு செய்யப்பட்டு க்யூஆர் கோட் இருந்தால் மட்டுமே பெட்ரோல் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், நாவற்குழி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு வியாழக்கிழமை இரவு  பைக்கில் வந்த 2 இளைஞர்கள் பெட்ரோல் நிரப்புமாறு ஊழியரிடம் கேட்டுள்ளனர்.

க்யு ஆர் கோடு இல்லாததால் அவர் பெட்ரோல் போட மறுக்கவே, அவரை வெட்டிவிட்டு  தப்பிச் சென்றனர்.  

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments