பிபிசி அலுவலகத்தில் 60 மணி நேரமாக நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்..!

0 3144

டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் 3 நாட்களாக நடைபெற்றுவந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது.

பிபிசி தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்தால் சர்ச்சை எழுந்த நிலையில், அந்த படம் தொடர்பான வீடியோக்களை மத்திய அரசு முடக்கியது.

இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பிபிசி மற்றும் அதனுடன் தொடர்புடைய அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 நாட்களாக ஆய்வு நடத்தி வந்தனர்.

சர்வதேச வரிவிதிப்பு உள்ளிட்டவை குறித்து நடைபெற்ற இந்த சோதனையில், சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments