டெக்சாஸ் மாகாணத்தில் வணிக வளாகத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு..!

0 1093

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வணிக வளாகத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தோடு, 3 பேர் காயமடைந்தனர்.

எல் பாசோ நகரில் உள்ள வணிக வளாகத்திற்குள் புகுந்து மர்ம நபர்கள், அங்குள்ள ஃபுட் கோர்ட் மற்றும் டிலார்ட் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

தகவலறிந்து சென்ற போலீசார் ஒருவனை சுற்றி வளைத்து பிடித்தனர். மற்றொருவன் வெளியில் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாமென போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

தற்போது வணிக வளாகம் மூடப்பட்டு அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments