ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு சொகுசு வேனில் கடத்தி வரப்பட்ட 438கிலோ கஞ்சா பறிமுதல்..!
சென்னை அருகே சொகுசு வேனில் நூதன முறையில் கடத்தி வரப்பட்ட 438 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஆந்திராவிலிருந்து சாலை மார்க்கமாக காரனோடை சுங்கச்சாவடி அருகே சந்தேகத்திற்கிடமாக வந்த வேனை தடுத்து நிறுத்தி மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது அந்த வேனின் மேல் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த பாக்சில் 200 கஞ்சா பொட்டலங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதனை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments