கோவையில் நீதிமன்றம் அருகே ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது!

0 1784

கோவையில் நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் ரவுடி கோகுல் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த கோகுலை 7 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது.

கோத்தகிரியில் வைத்து அந்த 7 பேரையும் போலீசார் கைது செய்த நிலையில், கோவைக்கு அழைத்து வரும் வழியில் தப்பியோட முயன்ற கெளதம், ஜோஸ்வா ஆகிய இருவரை போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடித்தனர்.

அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கொலைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை கொடுத்து குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments