நரிக்குறவர்களுக்கு முதலமைச்சரை சந்திக்க அனுமதி மறுப்பு.. காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்..!

0 1567

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆய்வு பணிக்காக வந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க அனுமதி மறுத்ததாக கூறி, காவல்துறையினருடன் நரிக்குறவர்கள் மற்றும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் வருவதை அறிந்து அவரிடம் மனு அளிப்பதற்காக ஆட்சியர் அலுவலக வாசலில் காத்திருந்தவர்களை போலீசார் அனுமதிக்கவில்லையென கூறப்படுகிறது.

அப்போது, வாக்குவாதத்தில் ஈடுபட்டுவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments