கோவை கார் வெடிப்பு : சென்னை உள்பட தமிழகத்தின் 40 இடங்களில் என்ஐஏ சோதனை..!

0 1278

கோவையில் கார் வெடிப்பு தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

கோவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை சென்னையில் கொடுங்கையூர், மண்ணடியிலும் நெல்லை மாவட்டம் சுத்தமல்லி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட கரிக்காத்தோப்பு, தென்காசி, மயிலாடுதுறை மற்றும் கோவை மாவட்டத்தில்  உக்கடம் உள்ளிட்ட 15 இடங்களிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

இதேபோல் கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் 20 இடங்களிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments